No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

கர்தினால் ஆர்தர் ரோச்

இங்கிலாந்தில் மார்ச் 6, 1950 ஆம் ஆண்டு பிறந்த இவர், கத்தோலிக்க திருவழிபாட்டு மற்றும் திருவருள்சாதன ஒழுங்குநிலை பேராயத்தின் தலைவராக 2021 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார். இதற்கு முன்பு 2012 முதல் 2021 வரை இப்பேராயத்தின் செயலராகச் சிறப்பாகச் செயல்பட்டு பங்களிப்புச் செய்திருந்தார். இங்கிலாந்தில் உள்ள லிட்ஸ் மறைமாவட்டத்தின் ஒன்பதாவது ஆயராக 2004 முதல் 2012 வரையும் அதற்கு முன்பு வெஸ்ட் மினிஸ்டர் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும் நியமனம் பெற்று பணியாற்றினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Comment