No icon

குடந்தை ஞானி

மறைக்கல்வியுரை: வயதானவர்கள் நீதியின்மீது தாகம் கொண்டிருக்க...

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை (மே 25, புதன்கிழழை, வத்திக்கான்)

முதுமை குறித்த சிந்தனையில், திருவிவிலியத்தில் மற்றுமொரு அணிகலனாக விளங்கும் சபை உரையாளர் நூல் பக்கம் நம் எண்ணங்களைத் திருப்புவோம். இந்த சிறிய நூலின் துவக்கமே நம்மை திகைக்க வைக்கின்றது. “வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண், எல்லாமே “குழப்பம்”, எல்லாமே “புகை”, எல்லாமே “வெறுமை” என்று, அந்நூல் நம்மை சிந்திக்க வைக்கின்றது. நாம் வாழ்வதன் அர்த்தம் பற்றிய கேள்வியை எழுப்புகின்ற இச்சொல்லாடல்களை திருவிவிலியத்தில் காண்பது வியப்பாக இருக்கிறது.

எல்லாமே வீண் என்ற மிகப்பெரும் எதார்த்தத்தோடு பேசுகின்ற இந்நூலின் வயதுமுதிர்ந்த ஆசிரியர், ஏமாற்றமான வாழ்வில் வளர்வதும், நம் உலகை சிறந்த இடமாக அமைப்பதற்கு முயற்சிகளைக் கைவிடுவதும் எவ்வளவு எளிது என்பது பற்றிப் பேசுகிறார். இவ்வாறு வாழ்வதற்கு ஏற்படும் சோதனை, நிச்சயமாக நிலைத்திருப்பதுவே. இக்காலத்திலும்கூட மாபெரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவை, பல நேரங்களில் ஏமாற்ற உணர்வோடு சேர்ந்திருக்கிறது. நீதியும் அமைதியும் அடையமுடியாத இலக்குகள் என்று நாம் அஞ்சுகிறோம். கிறிஸ்தவ ஆன்மீக மரபு, சோம்பல் என்ற பாவத்தைப் பற்றிப் பேசுகின்றது. இது, தீமையை எதிர்க்கவும், புனிதத்தில் வளர முயற்சி செய்யவும் கடவுளின் வார்த்தைக்கும், அவர் நம் உலகிற்கு அளித்துள்ள வாக்குறுதிகளுக்கும் பிரமாணிக்கமாக இருப்பதற்கும் நமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் மீதுள்ள அக்கறையை இழப்பதால் உருவாகிறது. சபை உரையாளர், இத்தகைய அனைத்து பாவங்களையும் புறக்கணித்து, கடவுளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியவும், மீட்புத் திட்டத்தில் நம்பிக்கை வைக்கவும், நம்மை வலியுறுத்துகிறார். சபை உரையாளரின் ஞானமும், அனுபவமும், வயதுமுதிர்ந்த அனைத்து மனிதரிலும் பிரதிபலிப்பதாக. இதனால், நம் வாழ்வைப் புதுப்பிப்பதற்கும், நம் உலகை மாற்றுவதற்கும், அவர்கள், தங்களின் நம்பிக்கையை, கடவுளின் வார்த்தையிலும், அதன் வல்லமையிலும் தொடர்ந்து வைப்பார்கள். இவ்வாறு, சபை உரையாளர் நூல் பற்றிய தன் சிந்தனைகளை இப்புதன் மறைக்கல்வியுரையில் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வயதுமுதிர்ந்தோர், தங்களது விலைமதிப்பற்ற அறிவை, அனுபவத்தை தங்களுக்காக மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சோதனையை விலக்கி, நீதியின் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளவேண்டும்.

Comment