No icon

குடந்தை ஞானி

அகில உலக மறைக்கல்வி கூட்டமைப்பின் உறுப்பினராக ஆயர் தாமஸ் மக்வான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குஜராத் - காந்தி நகர் உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு தாமஸ் மக்வான் அவர்களை அகில உலக மறைக்கல்வி கூட்டமைப்பின் (COINCAT) உறுப்பினர்களில் ஒருவராக நியமித்துள்ளார்பேராயர் தாமஸ் மக்வான் அவர்கள் அகில இந்திய ஆயர் கூட்டமைப்பின் மறைக்கல்வி பணிக்குழுவின் தலைவராக உள்ளார்.  1973 ஆம் ஆண்டு திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள் திருத்தந்தைக்கான ஓர் ஆலோசனை அமைப்பாக இவ்வமைப்பை ஏற்படுத்தினார். ஆயர்கள், பங்குத்தந்தையர்கள், பொதுநிலையின தலைவர்கள் எதிர்கொள்ளும் மறைக்கல்வி சார்ந்த வாய்ப்புகள், சவால்கள், பிரச்சனைகளில் மேய்ப்புப் பணி சார்ந்த முன்னெடுப்புகளை எடுப்பதற்கு இவ்வமைப்பு உதவும்தற்போது புதிய முறையிலான நற்செய்தி அறிவிப்பை முன்னெடுக்கும் திருப்பீட அமைப்பின் கீழ் இவ்வமைப்பு உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Comment