No icon

கிறிஸ்தவ அமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்!

மணிப்பூரில் உள்ள பூர்வ இனக் கிறிஸ்தவ அமைப்பின்  அலுவலகம் மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதைக் கேள்வியுற்ற  பிற கிறிஸ்தவ அமைப்புகள் தங்கள் கண்டனங்களை எழுப்பி வருகின்றன. பூர்வ இனக் கிறிஸ்தவர்களின் கோட்டையாகக் கருதப்படும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் நடந்த வன்முறைச் செயலுக்குப் பூர்வ இனசோமிசமூகத்தின் மாணவர் அமைப்பும் (ZSF) கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலத்தில் இதுபோன்று தாக்குதல்கள் நடந்தால் இவ்வமைப்பு அதனை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும் அது  எச்சரித்துள்ளது. சூராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள பூர்வ இன மக்களின் தலைவர் மன்றத்தின் (ITLF) அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் கணினிகள் மற்றும் ஆவணங்களை அழித்துள்ளனர் என்றும், அதே இரவில் பூர்வ இனக் கிறிஸ்தவ மக்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பூ கின்சா வியால்சாங் அவர்களைக் கொலை செய்யும் நோக்குடன் அவரது இல்லத்தைக் கும்பல் ஒன்று தாக்கியதாகவும் தனது பெயரை வெளியிட விரும்பாத தலத் திரு அவையின் தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

Comment