No icon

திருத்தந்தையின் முழக்கம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்

அருகிருப்பு, இரக்கம் மற்றும் மென்மை என்னும் கடவுளின் பண்புநலன் கொண்டவர்களாக நாம் வாழும்போது, சகோதர ஒன்றிப்பு மற்றும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து நாம் நடக்க முடியும்.”

- மார்ச் 26, நைஜீரியன் கத்தோலிக்கக் குழுமத்திற்கான செய்தி

கிறிஸ்து நம்மை எல்லையற்ற விதத்தில் அன்பு செய்கின்றார். அவரது அன்பு நமது தவறுகள் மற்றும் வீழ்ச்சிகளால் கட்டுப்படுத்தப்படாமல், நமக்காக தம் உயிரையே கொடுக்கும் அளவிற்கு உயர்ந்தது.”

- மார்ச் 25, அகில உலக இளையோருக்கான செய்தி

இயேசு தாழ்ச்சியுள்ள மற்றும் அமைதியுள்ள அரசராக எருசலேமிற்குள் நுழைந்தார். இரக்கமுள்ள அவரே நம் பாவங்களை மன்னிக்க வல்லவர். எனவே, அவருக்கு நம் இதயங்களைத் திறப்போம்.”

- மார்ச் 24, ஞாயிறு மூவேளை செபவுரை

ஊடகத்தின் பணி சிலருக்கானது அல்ல; அது அனைவரின் பொது நலனுக்கானது. கடைநிலையில் இருப்பவர்கள், ஏழைகள், குரலற்றவர்கள், ஒதுக்கப்பட்டவர்களுக்கான குரலாக அது இருக்கிறது.”

- மார்ச் 23, இத்தாலி ராய் ஊடகத்திற்கான நேர்காணல்

நம்மைக் குற்றவாளிகள் எனக் குறித்துக்காட்ட இயேசு தம் விரலை எப்போதும் நம்மை நோக்கி நீட்டுவதில்லை. மாறாக அவர் சிலுவையில் காட்டியது போல், நம்மை வாரி அணைத்துக்கொள்ள நம்மை நோக்கி தமது கரங்களை விரிக்கிறார்.”

- மார்ச் 22, திருத்தந்தையின் டுவிட்டர்’ குறுஞ்செய்தி

Comment