No icon

ஹங்கேரியில் திருத்தந்தை -

முதல் நாள் பயண நிகழ்வுகள்

ஏப்ரல் 28, வெள்ளிக்கிழமை தனது 41வது திருத்தூதுப் பயணத்தை திருத்தந்தை பிரான்சிஸ் தொடங்கினார். வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து உரோம் உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் முற்பகல் 11.00 மணிக்கு தனி வாகனத்தில் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 29 கிமீ பயணம் செய்து உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை உள்ளூர் நேரம் காலை 8 மணிக்கு வந்தடைந்தார். A 320 என்னும் இத்தாலிய விமானத்தில் ஹங்கேரியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கினார். 990 கிமீ தூரத்தை 1மணி 50 நிமிடங்களில் கடந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் ஹங்கேரிக்கு வான்வழியாக பயணம் செய்யும் போது கடக்கும் நாடுகளான இத்தாலி, குரோவாசியா, ஹங்கேரி ஆகியவற்றின் அரசுத்தலைவர்களுக்கு தன் வாழ்த்துச்செய்தியினையும் அனுப்பினார்.

Comment