No icon

சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் சபை

பேராயர் கிறிஸ்சோஸ்தோமோசின் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்

81 வயது நிரம்பிய சைப்ரசின் ஆர்த்தடாக்ஸ் பேராயர் 2ம் கிறிஸ்சோஸ்தோமோஸ் அவர்கள், நவம்பர் 07,  திங்களன்று இறைபதம் சேர்ந்ததையொட்டி, நவம்பர் 9, புதனன்று தனது பொது மறைக்கல்வி உரையின்போது நினைவுகூர்ந்து இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரது ஆன்மா நிறையமைதி அடைய இறைவேண்டல் செய்யுமாறும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்சோஸ்தோமோஸ் அவர்கள் ஒரு தொலைநோக்குப் பார்வைகொண்ட  போதகர், உரையாடலின் மனிதர் மற்றும் அமைதியை அன்புகூர்ந்தவர், நாட்டின் பல்வேறு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்த உழைத்தவர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்டிசம்பர் 2021-இல் தான் சைப்ரஸ் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது அவருடன் மேற்கொண்ட சகோதர சந்திப்புகளை அன்புடனும் நன்றியுடனும் நினைவுகூர்ந்தார்.

சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் சபையும், பேராயர் 2ம் கிறிஸ்சோஸ்தோமோஸ் மறைவு குறித்த தனது இரங்கல் செய்தியில்ஆர்த்தடாக்ஸ் சபை மீதான அவரது அன்பை நினைவுகூர்ந்துள்ளதுடன், அவர் எழுப்பிய மற்றும் திறக்கப்பட்ட அல்லது பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்ட பல கோவில்கள் அவரது அர்ப்பண வாழ்விற்குச்  சான்று பகர்கின்றன என்று பதிவு செய்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Comment