No icon

அடைக்கலமாதா பங்கு

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை திருமதி. செ.அந்தோணி விமலா.

தஞ்சை மறைமாவட்டம், அடைக்கலமாதா பங்கு, ஆசிரியை திருமதிசெ. அந்தோணி விமலா இவ்வாண்டிற்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை செப்டம்பர் 5 ஆம் தேதி பெற்றார். இவர் பள்ளியக்ரஹாரத்தில் உள்ள தஞ்சை மாநகராட்சி  நடுநிலைப்பள்ளியில்  இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை சேர்த்தமைக்காகவும், கற்றல் கற்பித்தல், எண்ணும் - எழுத்தும் எனும் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றி, திறம்பட தனது கற்பித்தல் பணியை செய்துவருவதற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் திருமதி.செ. அந்தோணி விமலா அவர்களை நாமும் பாராட்டி மகிழ்வோம்.

Comment