No icon

புதிய ஆலய அர்ச்சிப்பு விழா

முதன்மைகுருவின் வாழ்த்துரை

கோவை மறைமாவட்டம், சவேரியார்பாளையம் புனித பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலய அர்ச்சிப்பு விழாவினை கொண்டாடும் பங்குத்தந்தையர் மற்றும் பங்குமக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். புதிய ஆலயத்தைக் கட்டி எழுப்பி, திருநிலைப்படுத்தி இறைவனின் அன்புக்கும் இறைமக்களின் பயன்பாட்டிற்கும் நேர்ந்தளிக்கப்படபோகின்ற புனித நிகழ்வை எண்ணி மகிழ்கின்றேன். எழில்மிகு ஆலயம் அமைய உழைத்த அனைவரையும் மனதார பாராட்டுகின்றேன்.

“அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப் பலிகளும் என் பீடத்தின்மேல் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்" (எசா 56:7) என்ற இறைவார்த்தைக்கேற்ப இப்புதிய ஆலயத்தை அண்டிவரும் அனைத்து மக்களும் ‘இறைவேண்டலின் வீடு’ துணை புரிவதாக! புனித சவேரியாரின் பரிந்துரை, இறையாசீரை உங்களுக்கு பெற்றுத்தருவதாக!

புதிய ஆலய அர்ச்சிப்பு விழா அனைத்தும் நல்லமுறையில் நடைபெற செபிக்கின்றேன்.

ஆலயம் நம்மையும் இறைவனையும் மிக நெருக்கமாக சந்திக்கவும், உரையாடவும், நன்மக்களாக வாழவும் தூண்டிட ஜெபிக்கின்றேன்.

 

 

 

Comment