No icon

தவக்காலம்

தவக்காலம் இது தவக்காலம்
நெற்றியில் சாம்பல் பூசியே
நேரிய வழி நடக்க நேசர்
இயேசு அழைக்கும் தவக்காலம்.
நாற்பது நாளும் நோன்பிருந்து
நாளும் திருப்பலி காணீர்
நற்செயல்கள் புரிந்தே
நாயகன் இயேசுவில் மகிழ்வீர்
பசித் தோர்க்கு உணவும் விட்டு
தாகம் தீர்த்து மகிழ்வீர்
ஆடை இல்லார்க்கு ஆடையும்
நோயுற்றோருக்கு ஆறுதலும் தருவீர்.
கண்ணுக்குக்கண் பல்லுக்குப்பல் வேண்டாம்
கனிவுடன் மறுகன்னம் காட்டு
நீதிக்காய் துன்பத்தை ஏற்று
பரமன் இயேசுவில் மகிழ்வீர்
கண்காது கைகால் நாவினாலே
செய்த பாவம் நீங்க
கண்ணீர்மல்க ஆண்டவரைத் தொழுதிடு
மரியின் மைந்தன் மன்னித்தே ஏற்பார்
களவைநீக்கு கற்பைக் காத்திடு
அயலார்க்கு அன்பும் பகைவர்க்கு நேசமும்
துன்புறும் அன்பர்க்கு ஆறுதலும்
தந்தே மகிழ்வீர் இயேசுவில்
தவறுதல் மனித இயல்பு
வருந்துதல் மனித மாண்பு
திருந்திய மனிதனாய் இன்றே
இறைமகன் இயேசுவில் உயிர்த்தெழு

Comment