No icon

கவிதாயினி றூபா அன்ரன் - சுவிஸ்

அன்னை வேளாங்கன்னி ஆரோக்கியத் தாய்மரியே (பாடல் )

அன்னை வேளாங்கன்னி ஆரோக்கியத் தாய்மரியே

எங்கள் ஆதாரம் நீயே ஆரோபணமானாய்

அமலியாய் உதித்தாய் எங்கள் அன்னையே! 

 

தீராத வியாதியும் தீண்டாமற் காப்பாயே

பாராளும் அன்னையே பாவியின் தஞ்சமே !

ஓயாத அலைபோல ஓடி ஓழிகின்றோம்

தீயாகத் தொடர்ந்திடும் தீமைகள் விரட்டுமம்மா !

 

பஞ்சம் பிணியும் பறந்தோடச் செய்தே

தஞ்சம் எனவந்தோர் தவிப்பினை நீக்குமம்மா!

வாடிடும் சேயாய் வந்தோம் உன்பாதம் நாடிடும்

அடியவர் நலம்பெற அருளுமம்மா !

 

வேளைநகரில் உயர்ந்தவளே வேண்டுதல் கேட்பாயே

களைப்பினை நீக்கி கருணை காட்டிடம்மா !

தனிமையின் துயரங்கள் தகர்ந்தோடச் செய்வாயே

இனியவளே வாழ்த்துகின்றோம்!  இன்னிசை முழங்குகின்றோம் !

 

பாடல் வடிவில் எழுதியவர்

கவிதாயினி றூபா அன்ரன் - சுவிஸ்

 

 

Comment