No icon

கவிதை

ஆழமாய் உழுது விதைத்தவர் யார்?

ஊருக் கெல்லாம் சோறு போடும்

உழவ னொருவன் ஊரில் இருந்தான்

வஞ்சகம் எதுவும் செய்த தில்லை

வம்புக்கு எங்குமே சென்ற தில்லை

 

உழைப்பை மட்டுமே நம்பி வந்தான்

உவப்பும் பொங்கிட வாழ்ந்து வந்தான்

கையகம் இருந்த சிறு நிலமோ

கரடு முரடு வகை யதுவாம்

 

பெருத்த முற்செடி ஒரு புறமாம்

கனத்த பாறைகள் மறு புறமாம்

போக்கு வரத்துக்கு மிக உதவும்

பாதை தடங்களும் இடை வருமாம்

 

வானம் பார்த்த பூமி என்பதால்

வாய்ப்பு பார்த்தே காத் திருந்தான்

தருணம் மழையும் பொழிந் ததனால்

தகையாய் நிலமும் அமைந் ததுவாம்

 

ஆழவே உழுது பதம் அமைத்தான்

கூடவே நன்றாய் எரு சமைத்தான்

கொழித்த விதைகளை நிலம் விதைத்தான்

செழித்து வளரவே தளம் அமைத்தான்

 

பாறையில் அருகே விழுந்த சில

பாதியில் கருகி மடிந் தனவாம்

செடியின் நிழலில் விழுந் தவையோ

சிக்கி நெறிந்து சரிந் தனவாம்

 

நல்ல நிலத்தில் விழுந்த பல

நாற்பது மடங்கு பலித் தனவாம்

அறுபது மடங்கும் கொடுத்து தனவாம்

ஐம்பதிரு மடங்கும் கொழித் தனவாம்

 

ஆழமாய் உழுது விதைத்தவர் யார்?

அகன்றமாய் விழுந்த விதைகளும் யார்?

கொழித்து விளைந்த பலன்களும் யார்?

அழிந்து மடிந்த மணிகளும் யார்?

 

ஆராய்ந்தால் நோக்கம் புரிந்து விடும்

அமர்ந்தால் நடக்கத் தெரிந்து விடும்

ஆண்டவர் வார்த்தைக்கு செவி மடுப்போம்

ஆயிரம் மடங்கு பலன் கொடுப்போம்

 

Comment