No icon

Srilanka- Easter Attack

இலங்கையில் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக 2 நிமிட மௌனம்

இலங்கையில் கடந்த ஆண்டில் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக, நாட்டினர் அனைவரும் இரண்டு நிமிடம் மௌனம் அனுசரிக்குமாறும், அந்நேரத்தில் அனைத்து வழிபாட்டுத்தலங்களும்,  மணிகளை ஒலிக்குமாறும் இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்கேட்டுக் கொண்டுள்ளார்,.

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக, ஏப்ரல் 21, இன்று செவ்வாய் இலங்கை நேரம் காலை 8.40 மணிக்கு, நாட்டின் அனைத்து ஆலயங்களும், கோவில்களும் மணிகளை ஒலிக்க, காலை 8.45 மணி முதல் 8.47 வரை  இரண்டு இலங்கை முழுவதும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  அதன் பின்னர் பெரும்பாலோனோர் தங்கள் வீடுகளில் விளக்கு அல்லது, மெழுகுதரிகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

2019ம் ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் ஓராண்டு நினைவாக இடம்பெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும், கோவிட்-19 ஊரடங்கு நடவடிக்கையால் நிறுத்தப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி உயிர்ப்புப் பெருவிழாவன்று காலையில், கொழும்புவில் இரு கத்தோலிக்க ஆலயங்கள், மட்டக்களப்பில் ஒரு இவாஞ்சலிக்கல் ஆலயம் மற்றும், மூன்று ஆடம்பர பயணியர் மாளிகைகளில், ஒன்பது  தற்கொலை குண்டுவெடிப்பு நபர்கள், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தினர். இவற்றில், 37 வெளிநாட்டவர் உட்பட, குறைந்தது 279 பேர் உயிரிழந்தனர் மற்றும், குறைந்தது 500 பேர் காயமடைந்தனர்.

Comment