No icon

Covid-19/Chenglepet Diocese

செங்கை மறைமாவட்டம் ரூ.12 லட்சம் நிதியுதவி

செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் சார்பாக மேதகு ஆயர் நீதிநாதன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.ஜான் லூயிஸ் அவர்களைச் சந்தித்து, செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் சார்பாக தமிழக முதல்வரின் கொரோன தொற்றுநோய் ஒழிப்பு நிதிக்காக ரூபாய் பத்து லட்சத்தையும் அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா திருத்தலத்தின் சார்பாக ரூபாய் இரண்டு லட்சத்தையும்  நேரில் வழங்கினார்.  

ஆயர் மேதகு நீதிதாதன் அவர்களுடன் மறைமாவட்ட பொது பதில்குரு பேரருள்திரு. பாக்கிய ரெஜிஸ் அவர்களும், மறைமாவட்டப் பொருளாளர் அருள்பணி. எஸ்.ஜார்ஜ் ஸடீபன் அவர்களும் அருள்பணி.ஆர். லியோ எட்வின் அவர்களும் உடனிருந்தனர்.  செங்கல்பட்டு ஆட்சியர் திரு.ஜான் லூயிஸ் அவர்கள் காலத்தே செய்த உதவியைக் குறித்து தம் நன்றியை  மேதகு ஆயர் அவர்களிடம் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் தீவிரமாக இரண்டாம் கட்டத்தில் பரவிவரும் நிலையில் புனித வாரத்தை அர்த்தமுள்ள வரையில் கொண்டாடும் வகையில் செங்கை மறைமாவட்டத்தின் நிதியுதவி அமைந்திருந்தது.  

 தமிழகத்தில் சிறந்த பணியாற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆட்சியர்களில் திரு.உ.சகாயம் அவர்களின் வரிசையில் திரு.ஜான் லூயிஸ் அவர்களும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

Comment