No icon

Archbishop Antony Pappusamy/Covid-19

ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய மதுரை உயர் மறைமாவட்டம்

08.04.2020, Madurai.மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்கள் , தம் மதுரை உயர் மறைமாவட்டத்தின் சார்பில்,காரோனோ தொற்றுநோய் பரவலின் காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள இரண்டாயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு தேவையான மளிகைப்பொருள்களை மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் டி.ஜி.வினய் அவர்களை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

இதன் மூலம் ஒவ்வொர் ஏழைக் குடும்பமும் ஐந்து கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு, 1 கிலோ ரவா, 1 லிட்டர் சமையல் எண்ணெய், சமைப்பதற்குத் தேவையான மிளகு, சீரகம்,பூண்டு, மிளகாய் மற்றும் சுகாதாரத்தைப் பேணுவதற்கான குளியல் சோப் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளும்.

மேலும், மதுரை உயர்மறைமாவட்டத்தில் உள்ள பள்ளி கட்டிடங்களிலும் வளாகங்களிலும் புலம்பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் தேவையில் இருப்போர் பயன்படுத்துவதற்கும் இசைவுக் கடிதத்தைக் கொடுத்துள்ளார்.

பேராயரின் இந்த தாரளக் குணத்தையும் உதவும் மனப்பான்மையையும் ஆட்சியர் திரு.வினய் அவர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தார்.

பேராயர் அவர்களுடன் உயர் மறைமாவட்டப் பொருளாளர் அருள்பணி.பீட்டர் ராய் அவர்களும் உடனிருந்தார். 

Comment