No icon

புனித லூர்து அன்னை திருத்தலம்

பெரம்பூர் சென்னை மயிலை உயர் மறைமாவட்டம்.

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தில்  நூற்றாண்டுச் சிறப்புமிக்க பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில்  சென்னையில் உள்ள வேப்பேரி புனித அந்திரேயா ஆலயப் பங்கின் ஒரு பகுதியாக பெரம்பூர் பகுதி வாழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர்வட சென்னையில் உள்ள இந்த பெரம்பூர் பகுதி அக்காலத்தில் அவ்வளவாக வளர்ச்சி அடையாமல் இருந்த கால கட்டம் அதுஆகையால் வேப்பேரி புனித அந்திரேயா ஆலயத்தின் பங்குத்தந்தை பேரருள்திரு. ஹென்னசே அடிகளார், 1879ஆம் ஆண்டு பெரம்பூரில் லூர்தன்னை பெயரில் சிற்றாலயம் ஒன்றைக் கட்டியெழுப்ப முயற்சி எடுத்தார்அந்தச் சிற்றாலயப் பணிகள் 1880ஆம் ஆண்டு முடிவுப் பெற்றுபுனிதம் செய்யப்பட்டதை அடுத்து, வேப்பேரி பங்கின் கிளைப்பங்காக பெரம்பூர் பகுதி மாறியதுபெரம்பூர் பகுதியில் கிறிஸ்தவ மக்கள் தொடர்ந்து புலம்பெயர்ந்து குடியேறிய காரணத்தினால் அதனை தனிப்பங்காக உயர்த்த வேண்டிய  தேவை மெல்ல எழுந்ததுபெரம்பூர் புனித  லூர்தன்னை ஆலயப் பங்கானது 1903 ஆம் ஆண்டு அருட்தந்தை பி.ஜே. கரோல் தலைமையில் தனிப்பங்காக உருவெடுத்தது. 1935 ஆம் ஆண்டு பெரம்பூர்  பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருள்தந்தை முரே, இந்த ஆலயத்தை திருத்தலமாக உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார்.

1947 ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டில், பெரம்பூர் புனித லூர்தன்னை திருத்தலத்தின் பங்குத்தந்தை . மரியோட்டா .. முதல் தேசிய திருப்பயணத்தை தொடங்கி வைத்து இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். பிரான்சில் லூர்து நகரில் மசபியேல் என்னும் குகையில் புனித பெர்னதெத்துக்கு அன்னை மரியா கட்சிக் கொடுத்த திருத்தலத்தில் நடைபெறுவது போன்று நற்கருணை ஆசீருடன் நோயாளிகளுக்கு நலமளிக்கும் வழிபாட்டை அருள்தந்தை மரியோட்டா அறிமுகம்  செய்தார். பெரும்பாலான இறைமக்கள் இந்நற்கருணை ஆராதனையில் பங்குப்பெற்று நலமும் வளமும் பெறத்தொடங்கினர்.

1951ஆம் ஆண்டு, சிற்றாலயத்தைப் பேராலயமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுதற்போதுள்ள திருத்தல ஆலயத்தின் தரைத்தளத்தைக் கட்ட அடித்தளம் இடப்பட்டது. 1953 பிப்ரவரி மாதம்  22 ஆம் தேதி தேதி, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் அப்போதைய பேராயர் லூயிஸ் மத்தியாஸ் . அவர்கள் கட்டியெழுப்பப்பட்ட அழகிய கீழ்த்தள ஆலயத்தை புனிதம் செய்து திறந்து வைத்தார். 1958 ஆம் ஆண்டு அப்போதையப் பங்குத்தந்தை பேரருள்திரு. ஜோசப் சந்தனம் .. அவர்கள்  இறைமக்களின் எண்ணிக்கை பெருகியதால் மிகுந்த சிரத்தையெடுத்து தற்போதுள்ள மேல்தள ஆலயத்தின் கட்டுமானப் பணிகளை இறைமக்களின் பொருளுதவியுடன் தொடங்கினார்.  1953 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ந்தேதி, புனித லூர்து அன்னை திருநாளன்று, சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் முதல் பேராயர் மேதகு லூயிஸ் மத்தியாஸ் . புதிதாக கட்டியெழுப்பப்பட்ட மேல்தள ஆலயத்தை புனிதப்படுத்தி திறந்து வைத்தார்.

1968 ஆம் ஆண்டு பிரான்சில் புனித லூர்து அன்னை காட்சித்தந்ததை தத்துருபமாக விளக்கம் கெபி போன்ற அமைப்பு பெரம்பூர் புனித லூர்து அன்னை திருத்தலத்தின் இடதுப்பக்கம் கட்டியெழுப்பி மரியன்னை பக்தி முயற்சி பலப்படுத்தப்பட்டதுஇக்கெபியில்  பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் அன்னை மரியா காட்சி அளித்த இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட  ஒரு துண்டு கல் பதிக்கப்பட்டு, பக்தி வளர்க்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு ஆலயத்தின் இடது பக்கத்தில் நற்கருணை ஆராதனைக்காக மட்டும் ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டது. இதனை  சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் .எம். சின்னப்பா .. அவர்கள் அக்டோபர் 11ந்தேதி புனிதம் செய்து திறந்து வைத்தார்.

ஆலய அமைப்பு :

பெரம்பூர் தூய லூர்தன்னை திருத்தலம், பிரான்சின் லூர்து நகரில் அமைந்துள்ள மரியன்னை ஆலயத்தை மாதிரியாகக் கொண்டு இரண்டடுக்கு முறையில் கட்டப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆம்கீழ்த்தளம், மேல்தளம் என இரண்டடுக்காக அமைந்துள்ள இந்த திருத்தல ஆலயம் கலைநயம் மிகுந்த தூண்களைக் கொண்டு பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது. சலேசிய சபை குருக்களின் மேலாண்மையில் உள்ள இத்திருத்தலம் அன்னை மரியா மீதான பக்தி முயற்சியை சென்னை மாநகரத்தில் வளர்ப்பதில் அளப்பரிய பங்களிப்பை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செவ்வனே செய்து வருகிறத.

கீழ்த்தள ஆலயத்தின் நடுப்பீடத்தில் பாடுபட்ட சுரூபமும், இடது பக்கத்தில் லூர்து அன்னை, வலது பக்கத்தில் புனித யோசேப்பு பீடங்களும் அமைந்துள்ளன. பக்கவாட்டு கதவுகளின் மேற்புறத்தில் அன்னை மரியாவின்  சிறப்புகளை விளக்கும் பல்வேறு வண்ண வண்ண கண்ணாடி ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. சிலுவைப்பாதையின் 14 நிலைகளும் புடைப்புச் சிற்பங்களாக ஆலயத்திற்குள்ளே அமைந்துள்ளன.

மேல்தள ஆலயத்தின் நடுப்பீடத்தில் லூர்தன்னை சுரூபமும், இடது பக்கத்தில் புனித தொன் போஸ்கோ திருச்சுருப பீடமும், வலது பக்கத்தில் புனித தோமினிக் சாவியோ திருப்பீடமும் அமைந்துள்ளது. மேல்தள ஆலயத்தில் உள்ள திருச் சிலுவைப்பாதையின் 14 நிலைகளும் புடைப்புச் சிற்பங்களாகவே அமைக்கப்பட்டுள்ளன.

மேல்தள ஆலயத்திற்கு செல்ல வளாக முகப்பில் இருந்து சறுக்குத்தளமும், கீழ்த்தள ஆலய முகப்பிலும் பின்புறமும் இருந்து படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் முதியவர்களும் இளைஞர்களும் மிக எளிதாக பக்தி முயற்சியுடன் மேல்தள ஆலயத்திற்கு செல்ல முடிகிறதுநாம் அனைவரும் விண்ணகத் திருப்பயணிகள் என்பதை இந்த மேல்தள ஆலயம் சொல்லாமல் சொல்கிறத. பெரம்பூர் புனித லூர்து அன்னை  திருத்தலத்தின் மத்திய கோபுரத்தின் நடுப்பகுதியில், புனித பெர்னதெத்க்கு  அன்னை மரியா காட்சி அளித்ததை விளக்கும்வகையில்எழில் மிகுந்த வண்ணக் கண்ணாடி ஓவியம் இடம் பெற்று காண்போர் அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

இப்பெரம்பூர் பங்கிலிருந்து  திரளான எண்ணிக்கையில் இறையழைத்தல் தாய்த்திருஅவைக்கு கிடைத்துள்ளது. நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்களும் அருள்சகோதரிகளும் இந்த பெரம்பூர் பங்கிலிருந்து உருவாகியுள்ளனர்

சென்னை மாநகரத்திலிருந்து மட்டுமின்றிநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான  எண்ணிக்கையில் இறைமக்கள் புனித லூர்து அன்னை திருத்தலத்தை நாடி பெரம்பூருக்கு திருப்பயணமாக வருகை தருகின்றனர். புனித லூர்து அன்னையின் பரிந்துரையால் ல் பல்வேறு நன்மைகளைப் பெற்றுச் செல்கின்றனர்.

தற்போது இப்பங்கில் 4000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 75க்கும்  மேற்பட்ட அன்பியங்கள் செயல்படுகின்றன.

சிறப்பு நிகழ்வுகள் :

மாதத்தின் முதல் வெள்ளி: இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்நாளில், நண்பகல் திருப்பலி மற்றும் மாலைத் திருப்பலி முடிந்தவுடன் சிறப்பு நற்ருணை ஆராதனை நடைபெறும்.

மாதத்தின் முதல் சனி: அன்னை மரியாவின் நாளான அன்று, மாலைத் திருப்பலி முடிந்த பிறகு சிறப்பு செபமாலையுடன் தேர்பவனி நடைபெறும்.

மாதத்தின் 2ஆம் சனி: பாவ மன்னிப்பு பெறும் ஒப்புரவு நாளாக சிறப்பிக்கப்பட்டு, மாலைத் திருப்பலியுடன் மற்றும் நற்கருணை ஆராதனை நடைபெறும்.

மாதத்தின் 11ந்தேதி: ஒவ்வொருமாதமும் லூர்து அன்னையின் சிறப்பு நாளான அன்று, காலையில் 200க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. மாலைத் திருப்பலிக்கு பிறகு நற்கருணை ஆசீருடன் நலமளிக்கும் வழிபாடு நடைபெறும்.

மாதத்தின் 24 ம் தேதி: கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் நினைவு நாளான அன்று, மாலைத் திருப்பலிக்கு பிறகு தேர்பவனி நடைபெறுகிறது.

ஆலயத் திருவிழா:

பெரம்பூர் புனித லூர்தன்னை திருத்தலத் திருவிழா பிப்ரவரி 11ந்தேதியை ஒட்டி வரும் ஞாயிறன்று கொண்டாடப்படும். பதினோரு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்களும் இறைமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

Comment