No icon

இலங்கையின் படுகொலைகளைக் கண்டிக்கிறோம்

இலங்கையில் தீவிரவாதிகளால் நடத்தப் பட்ட தொடர் குண்டு வெடிப்பை தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. குண்டு வெடிப்பில் தம்முயிரை இழந்தவர்க்கு, அவர் தம் குடும்பத்தினர்க்கு, தமிழக கத்தோலிக்க ஆயர்களும் கத்தோலிக்க நம்பிக்கையாளர்களும் தம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றனர். மக்களை மீட்க தோன்றிய இயேசு பிரான் சிலுவையில் மரித்தார்; பின்பு உயிர்த்தார் என்று நம்பும் கிறித்தவர்களின் நம்பிக்கைப் பெருநாளை சிதைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. மரித்தாலும் உயிர்ப்போம் என்ற நம்பிக்கையைச் சிதைக்க முனைந்த சதியாளர் களை உலக சமூகம் என்றுமே மன்னிக்காது.
கொழும்புவைச் சுற்றி அமைந்துள்ள மூன்று பெரிய தேவாலயங்களில் இக்குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. 351க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான அப்பாவிகள் படுகாயமடைந்துள்ளனர். இக்கொலைக்
குற்றத்தை நிகழ்த்திய கொடியவர்களுக்கு அமைதியாக இறைவேண்டலில் ஈடுபட்டிருப்போர் எப்படி எதிரிகளாக இருக்க முடியும்? தேவாலயங் களைக் குறிவைப்போர், எம்மதத்தைச் சார்ந் தோராயினும், அவர்கள் நம்பும் இறைவனுக்கு எதிரிகளே!
தேவாலயங்களையும், நகரின் மிகப்பெரிய விடுதிகளையும் குறிவைத்துத் தாக்கியோர்க்கு ஏதோ ஓர் அரசியல் நோக்கம் இருக்க வேண்டும். கிறித்தவர்களின் நம்பிக்கைப் பெருநாளாம் உயிர்ப்புப் பெருவிழாவன்று கிறித்தவ ஆலயங்கள் தகர்க்கப்படலுக்குப் பின் ஏதேனும் அரசியல் காரணமிருக்கிறதா என்பதைக் கண்டறியும் கடமை இலங்கை அரசுக்கு உண்டு. இலங்கையை ஆளும் சிங்கள பெரும்
பான்மை வாத அரசு, இலங்கையின் சிறுபான்மை தேசிய இனங்களின் மீதும், குறிப்பாக மதச்சிறு பான்மையினர் மீதும் காட்டி வரும் பகையரசியலை மக்கள் அறிவர். இப்போது குண்டு வெடிக்கப்பட்ட தேவாலயங்கள் அனைத்துமே தமிழர்க்குரியன. தமிழர் வாழ் பகுதியிலுள்ளன. ஈழப்போரின்போது, எவ்வகையான தீவிரவாதப் போக்கிற்கும் துணை நில்லாமல், நடுநிலை சார்ந்தவர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தேவாலயங்கள் எவையுமே, ஈழப்போரின்போது, பிரிவினையைத் தூண்டும் மையங்களாக செயற்பட்டதே இல்லை.
கிறித்தவ வழிபாட்டுத் தலங்களின் மீது தாக்குதல் நடத்தியோரை இலங்கை அரசு தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.
கிறித்தவப் பெருமக்களின் நம்பிக்கைத் திரு விழாவன்று, அப்பாவி கிறித்தவர் மீது நடத்தப்பட்ட நாகரிகமற்ற செயல்கள் இனிமேல் நடவாதிருக்க இலங்கை அரசு உத்தரவாதமளிக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.
அன்பு, அமைதி, சமத்துவம் எனும் விழுமியங் களைத் தாங்கி நிற்கும் கிறித்தவம், அரசு முன்னெடுக்கும் அமைதிப் பணிக்கு என்றும் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறோம்.

Comment