No icon

இறைவேண்டல் கூட்டம்

அமைதிக்கான இறைவேண்டலில் பல்மதத் தலைவர்களுடன் திருத்தந்தை

உரோம் நகரின் யூரோ பகுதிலுள்ள  “நுவோலாஎன்னும் கருத்தரங்கு மையத்தில்அமைதிக்கான அழுகுரல்என்ற தலைப்பில் அக்டோபர் 23 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா, பிரான்ஸ் அரசுத்தலைவர் எம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு மதத்தலைவர்களால் துவக்கப்பட்ட இக்கருத்தரங்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பங்கேற்புடன் செவ்வாய் மாலை கொலோசெயம் அரங்கில் நிறைவுக்கு வந்தது.

1986 ஆம் ஆண்டு முதல் அமைதிக்கான ஆண்டு இறைவேண்டல் கூட்டம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்றுவந்த நிலையில், அண்மை ஆண்டுகளில் கோவிட் பெருந்தொற்று காரணமாக உரோம் நகரிலேயே இடம்பெற்றுவருவதும், மூன்றாண்டுகளாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அதில் பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகில் போர், குறிப்பாக உக்ரைன் போர் இடம்பெறும் இன்றைய சூழல்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தஅமைதிக்கான அழுகுரல்எனும் இறைவேண்டல் நிகழ்வில், பல திருப்பீட அதிகாரிகளுடன், கிறிஸ்தவ, யூத, இஸ்லாம், புத்த, சீக்கிய, மற்றும் இந்து மதப்பிரதிநிதிகள் பங்குகொண்டனர்.

Comment