No icon

இந்தியத் திரு அவைக்குப் புதிய ஆயர்கள் நியமனம்

இந்தியத் திரு அவையின் மறைமாவட்டங்களான கும்பகோணம், குழித்துறை, ஜபல்பூர், விஜயபுரம், கர்வார், மீரட் ஆகிய  ஆறு மறைமாவட்டங்களுக்கும் புதிய ஆயர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஒரே நாளில் 6 மறைமாவட்டங்களுக்கும் ஆயரை நியமித்துள்ளது சிறப்பான செயலாக அமைந்துள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி வத்திக்கானிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களின்படி, கும்பகோணம் மறைமாவட்ட ஆயராகப் பேரருள்திரு. ஜீவானந்தம் அமலநாதன், குழித்துறை மறைமாவட்ட ஆயராகப் பேரருள்திரு. ஆல்பர்ட் அலெக்சாண்டர் அனஸ்தாஸ், ஜபல்பூர் மறைமாவட்ட ஆயராகப் பேரருள்திரு. வளன் அரசு, விஜயபுரம் மறைமாவட்டத் துணை ஆயராகப் பேரருள்திரு. ஜஸ்டின் அலெக்சாண்டர் மடத்திபரம்பில், மீரட் மறைமாவட்ட ஆயராகப் பேரருள்திரு. பாஸ்கர் ஜேசுராஜ், கர்வார் மறைமாவட்ட ஆயராகப் பேரருள்திரு. டூமிங் டயஸ் ஆகியோர் திருத்தந்தையால் புதிய ஆயர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  தேர்வு நிலை ஆயர்கள் ஜீவானந்தம் அமலநாதன், ஆல்பர்ட் அலெக்சாண்டர் அனஸ்தாஸ், வளன் அரசு, பாஸ்கர் ஜேசுராஜ் இவர்கள் நால்வரும்  தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்பது கூடுதல் மகிழ்வான செய்தியாக அமைந்திருக்கின்றது.

Comment