No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

துன்ப நிலைகளால் பாதிக்கப்பட்டோருக்கு, தாங்கும் வலிமையை அருள...

அமெரிக்க ஐக்கிய நாட்டின் மத்திய, மற்றும் தென் பகுதியில் அண்மையில் கடுஞ்சூறாவளி ஏற்படுத்தியுள்ள பல்வேறு இழப்புக்கள் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையை வெளியிடும் தந்திச்செய்தி ஒன்றை அமெரிக்க ஐக்கிய நாட்டு திருஅவைக்கு திருப்பீடம்அனுப்பியுள்ளது.

இந்தச் சூறாவளிப் புயலால் உயிரிழந்தவர்களுக்காக திருத்தந்தை இறைவனிடம் செபிப்பதாகவும், இழப்புக்களால் துயருறுவோருக்கு இறைவனின் ஆறுதலையும், இத்துன்ப நிலைகளால் பாதிக்கப்பட்டோருக்கு அவைகளைத் தாங்கும் வலிமையையும் இறைவன் அருளுமாறு திருத்தந்தை விண்ணப்பிப்பதாகவும், அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், தங்குமிடங்களை இழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை ஆற்றிவருவோர் அனைவருடனும் திருத்தந்தையின் ஒருமைப்பாடும், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள தந்திச்செய்தி வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், அமெரிக்க ஐக்கிய நாட்டு சூறாவளி ஏற்படுத்திய இழப்புக்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை திருத்தந்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment