No icon

அமெரிக்கா: தீக்கிரையான புனித யோசேப்பு கத்தோலிக்க ஆலயம்

மே 1 ஆம் தேதி, புதனன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரிசோனா மாநிலத்தின் தலைநகர் பீனிக்ஸின் வடபகுதியில் அமைந்துள்ள புனித யோசேப்பு கத்தோலிக்க ஆலயம் தீயில் எரிந்து விழுந்தது. புதன் அதிகாலையில் இந்த தீ ஆரம்ப
மாகியிருக்கலாம் என்றும், காலை 6 மணிக்கு தீ
அணைக்கப்பட்டது என்றும் தீயணைப்புத்துறை
அதிகாரிகள் கூறினர். புனித யோசேப்பு ஆலயத்தை இழந்துள்ள அதே வேளையில், இந்த தீயை அணைக்கப்
போராடிய வீரர்களுக்காக நன்றி கூறுகிறோம் என்று, பீனிக்ஸ் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
இந்தத் தீவிபத்தின் காரணங்களை தீயணைப்புத் துறை ஆய்வு செய்து வருகிறது என்று கூறியுள்ள பீனிக்ஸ் மறைமாவட்டம், இந்த விபத்து, தொழிலாளரான புனித யோசேப்பு திருநாளில் நிகழ்ந்தது மேலும் வேதனையைத் தருகிறது என்று கூறியுள்ளது. ஒவ்வொரு கோவிலும் அங்கு வாழும் சமுதாயத்தின் நம்பிக்கையாக விளங்குகிறது என்றும், இக்கோவிலைக் காப்பாற்ற இயலாமல் போனது மிகவும் வேதனை தருகிறது என்றும், தீயணைப்புப் படையின் தலைவர் னுயnலே ழுடைந அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
1969 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 18 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்ட புனித யோசேப்பு கத்தோலிக்க ஆலயம், வருகிற ஆகஸ்ட் மாதம் தன் 50 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஏற்பாடுகள் நிகழ்ந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Comment