No icon

சிறுபான்மையினருக்கு- நவம்பர் 09 & 10

திருநெல்வேலி -தென்காசி தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணைய ஆய்வு பணி -திரு.சா. பீட்டர் அல்போன்ஸ்.

அன்புடையீர் வணக்கம்,
தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணையம் கீழே குறிப்பிட்டவாறு மாவட்டங்களில் ஆய்வு பணிகளையும், சமூக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளோடு கலந்துரையாடல்களையும் நிகழ்த்த இருக்கின்றது. 
இந்நிகழ்வில் மாநில சிறுபான்மை ஆணைய தலைவர், துணை தலைவர், உறுப்பினர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொள்வார்கள். 
சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் நடக்க இருக்கும் இந்த ஆய்வுக்கும், உரையாடலுக்கும் அந்த மாவட்டங்களை சார்ந்த மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். 
தாங்கள் தங்களது பகுதியில் உள்ள சிறுபான்மை சமூகத்தை சார்ந்த தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் தகவல் அனுப்பி அப்பகுதியில் உள்ள சிறுபான்மையினரின் வாழ்வாதார பிரச்சனைகளை குறித்த விபரங்களையும் தங்களது கருத்துகளையும் ஆணையத்திற்கு தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
                

நாள் இடம்

09.11.2021, செவ்வாய், 

காலை 10.30 மணிக்கு

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்

 திருநெல்வேலி

10.11.2021- புதன்        

மதியம் 02.30 மணிக்கு

 மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்
                    தென்காசி

 நன்றி.
தங்கள் அன்புள்ள
திரு.சா. பீட்டர் அல்போன்ஸ்.
தலைவர், மாநில சிறுபானைமையினர் நல ஆணையம்,
தமிழ்நாடு அரசு

Comment