No icon

வருங்காலத்தைக் கட்டியெழுப்புதல்

உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்திற்கான தலைப்பு

இவ்வாண்டு உலகில் சிறப்பிக்கப்படவிருக்கும் 109வது உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்திற்கென மையக்கருத்தை திருப்பீடம் வெளியிட்டுள்ளது. உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்திற்கென, “குடிபெயர்வதா, தொடர்ந்து தங்கியிருப்பதா என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்என்பதை இவ்வாண்டு கொண்டாட்டங்களுக்கான தலைப்பாக மனித ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திருப்பீட அமைப்பு அறிவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினத்திற்கென்று, திருப்பீடத்தால், “குடிபெயர்வதா, தொடர்ந்து தங்கியிருப்பதா என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்”, என்பது தேர்வுச் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு, “குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோருடன் இணைந்து வருங்காலத்தைக் கட்டியெழுப்புதல்”, என்பது தலைப்பாக எடுக்கப்பட்டிருந்தது.  

Comment