Namvazhvu
உண்மையை உரைப்பதே பத்திரிகைச் சுதந்திரம்!
Wednesday, 15 May 2024 10:57 am
Namvazhvu

Namvazhvu

ஒரு நல்ல விமர்சன உணர்வை வளர்ப்பதற்கும், உண்மையைப் பொய்யிலிருந்து வேறுபடுத்தி அறிவதற்கும் பத்திரிகைச் சுதந்திரம் என்பது மிகவும் அவசியமான ஒன்று எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய ஒரு குறுஞ்செய்தியை வெளியிட்டுள்ளார். பத்திரிகைச் சுதந்திரம் என்பது தவறான கருத்தியல்களைத் தவிர்த்து, நீதிக்காகவும், அமைதிக்காகவும், படைப்பைப் பாதுகாப்பதற்காகவும் உழைக்க நமக்கு உதவுகிறது என்றும் விளக்கியுள்ளார்.