Namvazhvu
திரு அவையில் உலகக் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்!
Friday, 26 Apr 2024 06:55 am
Namvazhvu

Namvazhvu

திரு அவையில் உலகக் குழந்தைகள் தினம் சிறப்பிக்கப்படும் என்று கடந்த ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்ததன்படி,  இவ்வாண்டு மே மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் உரோம் நகரில் இவ்விழா கொண்டாடப்பட உள்ளது. “இது திரு அவையில் கொண்டாடப்பட இருக்கும் முதல் உலகக் குழந்தைகள் தினமாகும். எனவே, இந்நாளானது திரு அவையின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும். தந்தைக்குரிய அன்பு மற்றும் கவனிப்போடு உலகக் குழந்தைகள் தினத்தைக் கொண்டாட அனுமதித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காகப் பல இலட்சம் குழந்தைகள் உலகெங்கிலும் இருந்து முன்பதிவு செய்துள்ளனர். ஏறக்குறைய 80 நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்” என்று உலகக் குழந்தைகள் தினக் கொண்டாட்டங்களை நடத்தும் குழுவைச் சேர்ந்த அருள்பணி. என்சோ ஃபொர்த்துனோ கூறியுள்ளார். இக்கொண்டாட்ட நாளில் ஒவ்வொரு மறைமாவட்டமும் தங்கள் மறை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுடன் இந்நாளைச் சிறப்பிக்க திருத்தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.