Namvazhvu
ஆலயக் கட்டுமானப் பணி நன்றிப்பெருக்குடன் உங்களை வரவேற்கிறேன்!
Tuesday, 06 Sep 2022 07:18 am
Namvazhvu

Namvazhvu

கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார் (2கொரி 9:8).

உன்னதமான உமது உறைவிடத்தை அமைத்திட சிறுகருவியாய் எனை தேர்ந்தெடுத்து, அருளையும் ஆசீரையும் அளித்த மூவொரு இறைவா, உமக்கு எனது உள்ளம் நிறைந்த நன்றி கூறுகிறேன்.  உமது இந்த இல்லிடத்தை அமைத்திட கடவுளின் கரமாக என்னை வழிநடத்தி, இறைவனிடம் அன்பையும் அரவணைப்பையும் தம் பரிந்துரையால்  பெற்றுத் தந்த அன்னை வேளாங்கண்ணி மாதாவுக்கும் நன்றி!

இந்த ஆலயக் கட்டுமானப் பணிக்கு உற்றத் துணையாய் இருந்து, ஒவ்வொரு செயலிலும் என்னை ஊக்குவித்து வழிநடத்திய கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்வினாஸ்  அவர்களுக்கும், முதன்மை குரு, மறைமாவட்ட பொருளாளர் தந்தையர் அவர்களுக்கும், அனைத்து தோழமை குருக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் என்னோடு ஒன்றித்து எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய ஆலய கட்டிடப் பொறியாளர்கள், பங்குப்பேரவை உறுப்பினர்கள், அன்பியப் பொறுப்பாளர்கள், பல்லடம் பங்கு இறைமக்கள், இவ்வாலய பணிக்காய் தங்களது உடலுழைப்பைத் தந்து உதவிய நல்லுள்ளங்கள், பல்வேறு பங்குகளிலிருந்தும் பொருளாதார உதவியும் ஜெப உதவியும் செய்த கோவை மறைமாவட்டம், பிற மறைமாவட்டத்திலிருந்து உதவிய நன்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த புதிய ஆலய அர்ச்சிப்பு விழாவிற்கும், அதனைத் தொடர்ந்து நடைபெறுகிற அனைத்து நிகழ்வுகளிலும் குடும்பமாகவும் நண்பர்களோடும் கலந்துக்கொள்ள உங்களை இருகரம் கூப்பி நன்றிப்பெருக்குடன் அழைக்கிறேன்.  வாருங்கள்!