Namvazhvu
புதிய ஆலய அர்ச்சிப்பு விழா முதன்மைகுருவின் வாழ்த்துரை
Tuesday, 06 Sep 2022 07:07 am
Namvazhvu

Namvazhvu

கோவை மறைமாவட்டம் பல்லடம் பங்கின் புதிய ஆலய அர்ச்சிப்பு விழா குறித்து பேருவகை கொள்கிறேன். அன்னை வேளாங்கண்ணி தாயின் பாதுகாவலில் உள்ள இந்த பங்கானது சிறுவிதையாய் விதைக்கப்பட்டு பெருமரமாய் உயர்ந்து நிற்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த 25 ஆண்டுகளில் இறைவன் செய்த அனைத்து செயல்களுக்கும் நாம் மனதார நன்றி சொல்வோம். இந்த புதிய ஆலய அர்ச்சிப்பு பெருவிழா மற்றும் பழைய ஆலயத்தின் 25 ஆம் ஆண்டு

ஜூபிலி நிறைவு விழாவானது இறைவனுக்கு ஏற்றவர்களாய் வாழ வைத்து நம் கிறிஸ்தவ நம்பிக்கையை இன்னும் அதிகமாய் ஆழப்படுத்தட்டும். பங்கு என்பது ஓர் குடும்பம்; அதில் அனைவரும் இணைந்து வாழ்வதில்தான் இறையரசு உருவாகும். எனவே இவ்விழாக்களில் நம் ஒற்றுமையும், அன்பும், அமைதியும், மகிழ்வும் இன்னும் மேலோங்கி உயரட்டும்.

இவ்வாலயத்தை, சிறப்பாகக் கட்டியெழுப்பிய பங்குத்தந்தையையும், அவரோடு இணைந்து செயல்பட்ட அனைத்து நல்ல உள்ளங்களையும் நான் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். இனி வரும் காலங்களிலும் இறைவனின் அருளும் அன்னையின் அன்பும் என்றும் நிறைவாய் இருப்பதாக!

அன்புடன்

பேரருள்பணி. ஜான் ஜோசப் ஸ்தனிஸ்,

முதன்மைகுரு, கோவை மறைமாவட்டம்.