Namvazhvu
சவேரியார் பாளையம் புனித பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலய அர்ச்சிப்புப் பெருவிழாவிற்கு ஆயரின் ஆசியுரை
Tuesday, 09 Aug 2022 08:52 am
Namvazhvu

Namvazhvu

இது இறைவேண்டலின் வீடு இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன் - ஆகாய் 2:9

அன்புள்ள பங்கு அருள்பணியாளர்

அருள்திரு. ஜெகன் ஆண்டனி அடிகளார் அவர்களே!

உங்களுக்கும், உங்கள் பங்குமக்கள் அனைவருக்கும் என்னுடைய இறையாசீர் உரிதாக்குகிறேன். உங்களுடைய பங்கு தலமானது 230 ஆண்டுகள் இந்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது. இதன் நினைவாக புதிய ஆலயத்தைப் புனிதப்படுத்தும் இந்த ஆசீர்வாதமான நாட்களில் உங்களின் ஆழமான நம்பிக்கையையும், குடும்ப உணர்வினையும், முன்னிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

வழிகாட்டுதலின்றி வழிகள் பிறப்பதில்லை. நீங்கள் இந்த ஆலயத்தை கட்டி முடிப்பதற்கு 7 ஆண்டுகளாக வழிகாட்டியாய் தன்னையே அர்ப்பணித்து, இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வினை திறம்பட செய்து முடித்த உங்களுக்கும், கட்டிட பொறியாளர் அவர்களுக்கும், அவரோடு உடன் உழைத்த தொழிலாளர்களுக்கும் மற்றும் தங்கள் பங்குமக்களுக்கும் என்னுடைய இறையாசீர்.

‘ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது நம் முன்னோர்களின் அறிவுரை ஏனெனில், ஆலயம் என்பது இறைவனின் உடனிருப்பையும், ஆசீர்வாதங்களையும் கொடுக்கும் புனித இடம்! இங்கு நிறைவேற்றப்படும் அருளடையாளங்களில் பங்குபெற்று இறையாசீரை நிரம்பப் பெற்றுச் செல்ல அன்போடு வேண்டுகிறேன்.

இந்தப் புதிய ஆலயத்திற்குள் நுழையும் அனைத்து மக்களும் மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் இறையாசீரோடும் பயணிக்க இந்த ‘இறைவேண்டலின் வீடு’ துணை புரிவதாக! இறையாசீர் இந்த ஆலயத்தின் மீது தங்குவதாக! குறையற்ற அன்பும் கூட்டுமுயற்சியும் உங்களில் என்றும் நிலைப்பதாக! இறைவன் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக!